Arakalagam
ArakalagamNews

Truth. Tamil. People.

Tamil Nadu

தமிழ்நாடு

கருவறைத் தீண்டாமை இருள் நீங்கியதன் 5-ஆ ம் ஆண்டு !Tamil Nadu

கருவறைத் தீண்டாமை இருள் நீங்கியதன் 5-ஆ ம் ஆண்டு !

பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞரை நினைவு கூர்கிறோம்! 17 ஆண்டுகளாக காத்திருக்கும் 178 மாணவர்களுக்கும், 2021-லிருந்து படித்து முடித்த 400 மாணவர்களுக்கும் உடனே பணிநியமனம் வழங்க வேண்டும்! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் 128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு திருவண்ணாமலை மாவட்டம் - 90474 00485.

Arakalagam·13 days ago·1 min read
தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்: Tamil Nadu

தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட்:

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை புதன்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தவெக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று தாக்கல் செய்து வருகிறார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 ஆம் ஆண்டுக்கான தமிழகப் பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கான இலவச மின்சார மானியத்துக்காக மட்டும் ரூ.7,432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது தவெக அரசின் முதல் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக பயிர்க் கடன்கள் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதன் விவரம்: சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதன் பாதிப்பை குறைக்க வேளாண் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள மாவட்ட வாரியான திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Arakalagam·23 days ago·1 min read
தென்னகத்தின் 'இசைக்குயில்' எஸ். ஜானகி காலமானார்: திரையிசையில் ஒரு சகாப்தம் நிறைவுற்றது!Tamil Nadu

தென்னகத்தின் 'இசைக்குயில்' எஸ். ஜானகி காலமானார்: திரையிசையில் ஒரு சகாப்தம் நிறைவுற்றது!

இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணி பாடகியும், ரசிகர்களால் அன்போடு 'ஜானகி அம்மா' என்று அழைக்கப்படுபவருமான எஸ். ஜானகி (88), வயது மூப்பு மற்றும் மாரடைப்பு காரணமாக மைசூருவில் காலமானார்.

Arakalagam·about 2 months ago·1 min read
அரியலூர் அதிர்ச்சி: டாஸ்மாக் எதிர்ப்பு மறியலில் பள்ளி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - 3 மாணவர்கள் படுகாயம்!Tamil Nadu

அரியலூர் அதிர்ச்சி: டாஸ்மாக் எதிர்ப்பு மறியலில் பள்ளி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - 3 மாணவர்கள் படுகாயம்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. இதில் 3 மாணவர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Arakalagam·about 2 months ago·1 min read